மஞ்சள் காமலை

மஞ்சள் காமலை ஒரு நோயல்ல!

சிறுநீர் மஞ்சலாக போக பல காரணங்கள் இருக்கு.  அதிலே ஒண்ணுதான் மஞ்சள் காமாலை.  சில வகையான மருந்துகளை சாப்பிட்டாலே சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து, அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும்.  எனவே, ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.  அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்திடல் வேண்டும்.  இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா?  இல்லையா?  என்பதைக் கண்டறியலாம்.  அதனை உறுதிபடுத்தலாம்.  பிறகு, எதனால் ஏற்பட்டது என்பதனையும் கண்டறிந்து.  அதன் அடிப்படையில் சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

நமது நாட்டு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரண்டு பெரிய தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா?  இல்லையா?  என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள்.  இதற்கு பரிசோதனை செய்யாமல் சோற்றைத் தேடிப் போய் விடுகிறார்கள்.

இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது?  என்று பார்ப்பது இல்லை.

நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

கீழாநெல்லி மருந்து, பச்சை இலை வைத்தியம் என்று போகும் இவர்கள், மஞ்சள் காமாலை என்றாலே அது ஒரு நோய் என்று கருதிவிடுகிறார்கள். அது ஒரு நோயல்ல, ஏதோ ஒரு நோயின் அறிகுறிதான்!  ஏனென்றால், எண்ணற்ற நோய்களின் காரணமாக ஒருவருக்கு மஞ்சள் காமாலைக் வரலாம்.

 Dr.முத்துச்செல்வகுமார்
சென்னை